சம்சுன்டில், தன் கழுத்தில் உணவு தடுத்து, மூச்சுத்திணறி துடித்துக் கொண்டிருந்த பூனையை, வங்கி பாதுகாப்பு பணியாளர் செல்சுக் சாவ்தர், நல்ல மனதுடன் மூச்சுத்திணறல் முதலுதவி முறையைப் பயன்படுத்தி உயிர் திரும்பப் பெறச் செய்துள்ளார்.

பூனைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த இக்கட்டான சூழ்நிலையில், சிறிதும் பதற்றமடையாமல் மனிதர்களுக்குச் செய்யப்படும் முதலுதவி சிகிச்சை முறையான தந்திரத்தை அந்தப் பூனைக்குக் கச்சிதமாகச் செய்து அதன் உயிரை அவர் மீட்டுள்ளார்.

“>

ஒரு வாயில்லா ஜீவனின் ஆபத்தான நிலையைப் புரிந்து கொண்டு, சாதுரியமாகச் செயல்பட்டு பூனையின் உயிரைக் காப்பாற்றிய அந்த பாதுகாப்பு பணியாளரின் அசாத்திய துணிச்சலையும், மனிதநேயத்தையும் பாராட்டி தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருவதுடன், இந்த வீடியோ இணையத்தில் பரவி பெரும் வைரலாகி வருகிறது.