செய்தியாளர்களை சந்தித்து பேசிய வீரலட்சுமி, சீமானுக்கும் தனக்குமான  யுத்தம் தொடங்கி விட்டதாக அறிவித்தார். சீமான் என்னைப் பற்றி தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் சிங்கத்தோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் என்னை போன்ற கொசு கூட சண்டை போட அவருக்கு நேரமில்லை என்று பேசி இருக்கிறார். அப்போ நீங்க குள்ளநரியா சீமான். இனி வரக்கூடிய தேர்தல்களில் இந்த போர் நடக்கும். இதில் யார் ஜெயிக்கிறார் என்று பார்த்துவிடலாம்.

சீமானுக்கு நான் ஒரு சவால் விடுகிறேன். நான் தமிழர் பாஜக மற்றும் அதிமுகவின் பீ டீமுன்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கு. இதை சீமான் மறுக்கிறார். அப்படி நீங்க சொல்றது உண்மைனா, சொத்துக்குவிப்பு வழக்குல ஜெயலலிதாவும், சசிகலாவும் A1, A2 குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி அவங்களை ஒரு புத்தகமாக அடித்து மக்களிடம் கொடுக்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? அப்படி புத்தகம் அடிச்சு சீமான் கொடுத்தார் என்றால் நான் மொட்டை போட்டுக்கொள்கிறேன். இல்லை என்றால் சீமான் மீசையை எடுக்கணும் என் சவாலுக்கு ரெடியா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.