விமான தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 160 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1000க்கும் ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் நடத்திய மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக பாலஸ்தீனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் அமைப்பினரின் 21 ராணுவ வளாகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காசா மீது 16 டன் வெடிபொருட்களை வீசி இஸ்ரேல் தொடர்ந்து, விமானப்படை தாக்குதல் நடத்தி வருவதால் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் மூண்டுள்ள நிலையில் அங்கு வசிக்கும் தமிழர்கள், தமிழ்நாடு அரசை தொடர்பு கொள்வதற்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் உதவி தேவைப்படுவோர், +91-87602 48625, +91-99402 56444, +91-96000 23645 என்ற எண்களையோ, nrtchennai@tn .gov.in, [email protected] இணையதளங்களின் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.