எஸ் ஜே சூர்யா இயக்குனராகவும் நடிகராகவும் கலக்கி வந்தார். தற்போது முழுமையாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். ஒரு சில பாடங்களில்  வில்லனாகவும் நடித்து வருகிறார். சிம்புவோடு மாநாடு திரைப்படத்தில் நடித்த இவருடைய நடிப்பு ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் அருமையாக நடித்துள்ளார்.

இவருடைய நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். இதில் எஸ் ஜே சூர்யா ஐந்து குரல் மாற்றங்களை கலந்து பேசி இருப்பார். அப்பா மகன் இரண்டு கதாபாத்திரம் பல்வேறு காலகட்டத்திற்கு வருவதற்கு ஏற்ப பேசி அசத்தியிருப்பார் . இந்நிலையில் பேட்டியொன்றில் பேசிய நடிகர் விஷால், எஸ்.ஜெ சூர்யாவிற்கு ஓசிடி என்னும் மனநல பிரச்சனை உள்ளது. ஒரு முறை காட்சிக்காக மது அருந்த பயன்படுத்திய கிளாஸ் கழுவி விட்டதா என்று உதவியாளரிடம் கேட்க அவரும் புதியது என்பார். அது கழுவப்பட்டதா இல்லையா என்று கேள்வி கேட்டு தொல்லை செய்தார். அதன் பிறகு அவர் கண் முன் பாகவே அந்த கிளாஸ் கழுவப்பட்டது என்று கூறியுள்ளார்.