கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் இருந்தபோது 20 லட்சம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் தற்போது சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனை காரணமாக அவரது வீட்டின் அருகே ஆதரவாளர்கள் பலரும் திரண்டு உள்ளனர்.