மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என ஐகோர்ட்டில் சூர்யகுமார் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு இபிஎஸ்ஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஏற்கனவே இரட்டை இலை சின்னத்தில் தாங்கள் போட்டியிடுவதாக ஓபிஎஸ் திட்டவட்டமாக கூறி வருகிறார். தேர்தல் நெருங்கும் சூழலில் இந்த வழக்கு இபிஎஸ் தரப்பினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.