மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சியினரக கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ஒரு சிலர் ஒரு கட்சியில் இருந்து விலகி மற்றொரு கட்சியில் இணைந்தும் வருகின்றனர்.அந்தவகையில்கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தமிழர் தேசம் கட்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேசத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாநிலங்களவையில் இடம் மற்றும் 2026 தேர்தலில் 5 தொகுதிகள் என்ற நிபந்தனையுடன் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் கே.கே.செல்வகுமார் அறிவித்துள்ளார்.