தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுகவுக்கு சுமார் ₹500 கோடியை லாட்டரி மார்டின் நன்கொடையாக கொடுத்தது தற்போது தெரிய வந்திருக்கிறது. இந்தத் தகவலை 2019ஆம் ஆண்டு விகடன் செய்தியாக வெளியிட்டது. ஆனால், அது பொய் செய்தி எனவும் அவதூறு எனவும் கூறி திமுக வழக்குத் தொடர்ந்தது. ஆனால், தற்போது மார்டின் 500 கோடி ரூபாய் கொடுத்ததை ஒப்புக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியதில், மார்ட்டினின் Future Gaming நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது. அதுவும் EDயின் விசாரணை வளையத்திற்குள் இருந்தபோதுதான், ₹1,368 கோடி அளவுக்கு நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இதில் திமுகவுக்கு ₹500 கோடியும், மீதமுள்ள ₹868 கோடி தொகையை பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அந்நிறுவனம் அளித்துள்ளது. ஒரே நேரத்தில் பாஜகவுக்கும், திமுகவுக்கும் நிதி கொடுத்தது விவாதப்பொருளாக மாறியுள்ளது
ஒரே நேரத்தில் பாஜகவுக்கும், திமுகவிற்கும் நன்கொடை…. அரசியலில் பரபரப்பு…!!
Related Posts
“எரிபொருள் செலவு மிச்சம்” தமிழகத்தில் விரைவில் LNG பேருந்துகள்….!!
LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக்…
Read moreதமிழகத்தில் ஏப்ரல் 28,29,30 ஆகிய மூன்று நாட்கள் டாஸ்மாக் மூடல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் பொதுவாக முக்கிய திருவிழாக்கள் ,பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் மதுரை அத்திப்பட்டி கிராமத்தில் புது மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதனால் திருவிழாவை முன்னிட்டு மக்கள் வசதிக்காக டாஸ்மாக்…
Read more