தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுகவுக்கு சுமார் ₹500 கோடியை லாட்டரி மார்டின் நன்கொடையாக கொடுத்தது தற்போது தெரிய வந்திருக்கிறது. இந்தத் தகவலை 2019ஆம் ஆண்டு விகடன் செய்தியாக வெளியிட்டது. ஆனால், அது பொய் செய்தி எனவும் அவதூறு எனவும் கூறி திமுக வழக்குத் தொடர்ந்தது. ஆனால், தற்போது மார்டின் 500 கோடி ரூபாய் கொடுத்ததை ஒப்புக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியதில், மார்ட்டினின் Future Gaming நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது. அதுவும் EDயின் விசாரணை வளையத்திற்குள் இருந்தபோதுதான், ₹1,368 கோடி அளவுக்கு நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இதில் திமுகவுக்கு ₹500 கோடியும், மீதமுள்ள ₹868 கோடி தொகையை பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அந்நிறுவனம் அளித்துள்ளது. ஒரே நேரத்தில் பாஜகவுக்கும், திமுகவுக்கும் நிதி கொடுத்தது விவாதப்பொருளாக மாறியுள்ளது
ஒரே நேரத்தில் பாஜகவுக்கும், திமுகவிற்கும் நன்கொடை…. அரசியலில் பரபரப்பு…!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more