ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு நேற்று  வீடு வீடாக சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., சி.வி.சண்முகம், அக்ரி கிருஷ்ண மூர்த்தி, விஜயபாஸ்கர் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பலர் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்குகள் சேகரித்தனர்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக ஆட்சி தான் மக்களுக்கு பொற்கால ஆட்சி, திமுக ஆட்சியில் 2 முறை வெற்றி பெற்றாலும் கூட ஈரோடு கிழக்கு தொகுதியிலோ, மாவட்டத்திலோ எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. நாடாளுமன்ற தேர்தலிலும், 2026 சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று நிரந்தர முதலமைச்சர் ஆவார் என்று கூறினார்.