அதிமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இவர் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கியதிலிருந்து அதிமுகவில் இருந்து வருகிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர் ஆக இருந்தவர் செங்கோட்டையன். இந்த நிலையில் அதிமுகவின் மேற்கு மண்டலத்தில் கட்சி மோதல் ஏற்பட்டதாகவும் இதனால் மனமுடைந்து செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து பாஜகவில் இணைவதாகவும் செய்திகள் வெளியாகியது.

அது மட்டுமல்லாமல் தமிழக பாஜக தலைவர் பதவி கிடைத்தால் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது .ஆனால் இவ்வாறு பரவும் இந்த செய்திக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் 45 ஆண்டு காலமாக அரசியலில் எந்த ஒரு கட்சியினரும் சிறு குற்றம்  கூட சொல்ல முடியாத அளவிற்கு என்னுடைய அரசியல் பயணம் நேர்மையாக தொடர்ந்து வருகிறது . ஆனால் என்னைப் பற்றி அவதூராகவும், சற்று உண்மையில்லாத வகையிலும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி குறித்து பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்டு தெளிவுபடுத்தி இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.