ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வே.ரா மாரடைப்பால் காலமானார். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். இவரது மரணத்தால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் (அ) முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு -ஐ நிற்க வைக்க இபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.

இதில் மட்டும் அதிமுக வெற்றிபெற்று விட்டால், இபிஎஸ் அரசியலில் தனக்கான தனி அடையாளத்தை பெற்றுவிடுவார். ஆனால், ஓபிஎஸ் தரப்பும் போட்டியிடும் என கூறப்படுகிறது. பொதுக்குழு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இருவருக்கும் இரட்டை இலை சின்னம் கிடைப்பது சிக்கல்.