புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றியபோது “செங்கோல் தற்போதுதான் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. செங்கோலை வழங்கிய தமிழ்நாட்டின்
ஆதீனங்களுக்கு நன்றி. வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரப் போகிறது.

எம்பிக்களின் எண்ணிக்கை உயர இருப்பதால் கூடுதல் இருக்கைகளுடன் புதிய நாடாளுமன்றம் அமைந்துள்ளது. எம்பிக்கள் உயர்ந்தால் அவர்கள் எங்கே அமர்வார்கள் எனும் கேள்வியை கருத்தில் கொண்டே முடிவெடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.