இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் கொரோனா தொற்றை குறைக்க அனைவரும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதை நாங்கள் அறிவோம், அதனால் கொரோனாவை தடுக்கும் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு வீரர்களையும் உதவி ஊழியர்களையும் பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது. வீரர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் எங்களுக்கு மிக முக்கியம் என்பதால் அரசாங்கத்தில் வழிகாட்டுதல்கள் பின்பற்றவும் வீரர்களுக்கு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. ஐபிஎல் சீசனில் மீண்டும் பயோ பபுள் முறை கொண்டு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.