தமிழகத்தில் மது கடைகளை மூட வேண்டும் என்று ஒருபுறம் கோரிக்கை எழுந்து வந்தாலும் மறுபுறம் டாஸ்மாக் கடைகளில் குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. தற்போது மோசடி, கொள்ளை சம்பவம். கள்ளச்சாராயம் விற்பனை போன்றவற்றை கருத்தில் கொண்டு இதை தடுக்கும் விதமாக அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று அரசு அறிவித்தது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு டாஸ்மாக் கடைக்கு இரண்டு கேமரா வீதம் தமிழகம் முழுவதும் உள்ள 3000 கடைகளில் 6,000 கேமராக்களை பொருத்த அரசு அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் டாஸ்மாக் கடைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டது. தொடர்ச்சியாக மேலும் 500 கடைகளுக்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்த தற்போது முடிவு செய்யப்பட்டு இதற்கான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது,