அகவிலைப்படி உயர்வு கிடைத்திருக்கும் நிலையில் அகவிலைப்படி நிலுவை தொகைக்காக ஊழியர்கள் காத்திருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் தான் மத்திய அரசானது , அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைபடியை  உயர்த்தி அறிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் அகவிலைப்படி நிலுவைத் தொகை மற்றும் பிக்மென்ட்  காரணி குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை .

ஒருவேளை அப்படி நடந்தால் ஊழியர்களுடை சம்பளம் கணிசமாக உயர வாய்ப்பு இருக்கிறது. இந்த இரண்டு அறிவிப்பு குறித்தும் அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக கூறவில்லை எனினும் ஊழியர்கள் மத்தியில் பலத்தை எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட காத்திருப்பதற்கு முடிவு கட்டும் இடமாக இன்னும் சில நாட்களில் இது குறித்து அறிவிப்பை அரசு வெளியிடலாம் என்றும், 18 மாதங்கள் நிலுவையில் உள்ள அகவிலைப்படி பாக்கி தொகை விரைவில் வரலாம் எனவும் கூறப்படுகிறது.