பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர், கோவை பெருங்கோட்ட பொறுப்பாளர் (கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர்) செல்வபிரபு, பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்து கொண்டார். அண்ணாமலைக்கு வலது கையாக செயல்பட்டு, அவருக்கு ஆதரவாக 12 மணி நேரத்திற்கு முன்பு வரை தீவிரமாக வாக்கு சேகரித்தவரை, இபிஎஸ்ஸின் வலது கையான எஸ்.பி.வேலுமணி ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளார்.