கர்நாடக மாநிலத்தில் சொத்து தகராறு காரணமாக அண்ணி மற்றும் அண்ணனின் 2 குழந்தைகளை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த குமார் கவுடா.  இவருக்கும், இவரின் மூத்த மூத்த சகோதரர் ஹொன்னே கவுடாவிற்கும் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் குமார் கவுடா, சகோதரர் ஹொன்னே கவுடா, மனைவி கீதா மாரி கவுத்ரா (32), குழந்தைகள் அகுல் (10), அங்கிதா (8) ஆகியோரை வெட்டிக் கொலை செய்துள்ளார். குடும்ப தகராறு மற்றும் சொத்து தகராறு காரணமாக இந்த கொலைகள் நடந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனட். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.