உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. விஜய் விஹார் காலனியில் உள்ள கரீம் ஹோட்டலில் பணியாற்றும் ஒரு ஆண், ரொட்டிகளை துப்பி தந்தூரில் போடுவதை காட்டும் வேதனையான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, டெல்லி கரவால் நகர் குடியிருப்பாளர் ராகுல் பச்சௌரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, லோனி பகுதியில் உள்ள அந்த ஹோட்டலில் போலீசார் விசாரணை நடத்தி, அன்கூர் விஹார் போலீஸ் ஸ்டேஷனில் குற்றவாளிக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். காசியாபாத் போலீஸ், வீடியோ அடிப்படையில் FIR பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது.
गाजियाबाद
➡करीम होटल में रोटी सेकने से पहले थूका
➡कारीगर द्वारा थूकने का वीडियो सामने आया
➡दिल्ली निवासी राहुल की शिकायत पर मामला दर्ज
➡अंकुर विहार में मामला दर्ज, आरोपी कर्मचारी फरार
➡लोनी के विजय विहार कॉलोनी करीम होटल का मामला#Ghaziabad | @ghaziabadpolice pic.twitter.com/urfYM0yfT1— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) September 24, 2025
வீடியோவில் காட்டப்படும் அந்த ஆண் தற்போது தலைமறைவாகியுள்ளார். போலீசார், அவரை விரைவில் கைது செய்ய முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொதுமக்களிடையே உணவு பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்துள்ளது.
