நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தன்னுடைய திறமையாலும், விடா முயற்சியினாலும் தற்போது நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகளைக் கொண்டு உள்ளார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன்  மாவீரன் படப்பிடிப்பு முடிந்துவிட்டட்டதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “சூப்பர் ஸ்டார் ரஜினி போல் மிமிக்ரி செய்துள்ளேன், அவரது சாயல் என்னிடம் இருப்பது சந்தோஷம்தான். கமல்ஹாசன் தயாரிப்பில் அடுத்ததாக புதிய படத்தில் நடிக்க உள்ளேன். மாவீரன் படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து அவரது தந்தை மறைவுக்கு ஆறுதல் கூறினேன்” என தெரிவித்தார்.