சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டியில் இருந்து அடையாறு செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் அமைந்துள்ளது. இன்று காலை 8 அடி ஆழத்தில் 6 அடி அகலத்தில் அங்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் பள்ளத்திற்கு அருகே தடுப்புகளை அமைத்து வாகன ஓட்டிகளை உஷார் படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அறிந்த போலீசாரும் மாநகராட்சி ஊழியர்களும் அந்த பள்ளத்தை மூடும் பணியில் 1 1/2 மணி நேரம் ஈடுபட்டனர். அதன் பிறகு காலை 9.30 மணிக்கு பள்ளத்தை சரி செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து சீரானது. வழக்கம் போல வாகனங்கள் சென்றது.