செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 7.39 மணிக்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகிறது. அந்த நல்ல அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மட்டுமில்லாமல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இரண்டு முறை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிகிறது. வாணியம்பாடியில் காலை 7.35 மற்றும் 7.42 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.