சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வாலிபர் ஒருவர் ஐஸ்கிரீம்களை கவரில் பேக் செய்து கொண்டிருக்கிறார். அவர் குச்சி ஐஸ்களை கவரில் பேக் செய்து கொண்டிருந்தபோது ஒவ்வொரு ஐஸ்கிரீமையாக வாயில் வைத்து ருசித்து விட்டு பேக் செய்கிறார்.

ஒரு கூடையில் ஐஸ்கிரீம்களை வைத்துவிட்டு மற்றொரு கூடையில் அதனை பேக் செய்து போடுகிறார். அவர் ஒவ்வொரு ஐஸ்கிரீமையும் பேக் செய்யும் போது ருசித்துவிட்டு பேக் செய்கிறார். இந்த வீடியோ எங்கு எப்போது எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் சரிவர தெரியவில்லை. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.