பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் சென்ற 16-ம் தேதி வெளியான படம் “ஆதிபுருஷ்”. இராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை பிரபல இயக்குனர் ஓம் ராவத் இயக்கி இருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதனிடையே பாகுபலி படத்திற்கு பின் இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளில் நடிகர் பிரபாஸுக்கு ரசிகர் வட்டம் பெருகி இருக்கிறது. அதன்படி ஜப்பானை சேர்ந்த ரசிகை ஒருவர் ஆதிபுருஷ் படத்தை பார்க்க டோக்கியோவிலிருந்து கிட்டத்தட்ட 5,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்து சிங்கப்பூருக்கு வந்தார். அதனை தொடர்ந்து அவர் ஆதிபுருஷ் படத்தை பார்த்துள்ளார்.