உலக நாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டு ஒரு பிசியான நடிகையாக திரையுலகில் வலம் வருகிறார். இவர் தமிழில் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவருக்கு தற்போது தமிழில் போதிய வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருந்த வால்டர் வீரய்யா மற்றும் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்திருந்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படங்களில் நடிப்பதற்கு நடிகை சுருதிஹாசன் தலா 2.5 கோடி சம்பளம் வாங்கியதாக ஒரு புது தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் மூத்த நடிகர்களுக்கு மட்டுமே ஜோடியாக நடிப்பதாக சுருதிஹாசன் பற்றி விமர்சனங்கள் வந்த நிலையில் அதற்கு ஸ்ருதிஹாசன் பதிலடி கொடுத்து இருந்தார். இதற்கிடையில் நடிகர் சுருதிஹாசனின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் தற்போது கேஜிஎஃப் இயக்குனரின் சலார் படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு ஒரு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டிருக்கிறதாம். மேலும் இந்த திரைப்படம் 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.