பேருந்து நிறுத்தங்கள் மற்றும் நிலையங்களில், அடுத்த பேருந்து எப்போது வரும் என மக்கள் அறியும் வகையில், டிஜிட்டல் தகவல் பலகைகளை பொருத்த சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 50 பேருந்துகளில் இதற்கான கருவியை பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

அடுத்தாண்டு ஜூலை மாதத்திற்குள் சென்னை முழுவதும் அமலுக்கு வரும் என MTC தகவல் வெளியிட்டுள்ளது. பேருந்துகள் உரிய நேரத்தில் வருவதில்லை என பல புகார்கள் எழுந்துவந்து நிலையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.