மதுரை துவரிமான் பகுதியில் சமுதாயகூடத்துக்கு மேற்கூரை அமைப்பதற்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பத்திரிகையாளர்களிடம் பேசியபோது “பாட்னாவில் நடந்த எதிர்கட்சி கூட்டத்தால் பிரயோஜனம் இல்லை. உப்புக்கு சப்பாகதான் அந்த கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

அடுத்த தலைமுறை நடிகர் விஜய் தான். தளபதி அரசியலுக்கு வருவதில் என்ன தவறு இருக்கிறது? ஒரு தமிழராக விஜய் தன் சொந்த பணத்தை 13 மணி நேரம் நின்று தேர்வில் வெற்றியடைந்த மாணவர்களுக்கு கொடுத்து உள்ளார். யார் யாரோ தங்களை பிரதமர் எனவும் முதலவர் எனவும் கூறிக்கொள்கின்றனர். அப்படி இருக்கையில் விஜய் ஏன் வரக் கூடாது? அவர் அரசியலுக்கு வருவதையும், வளர்வதையும் வாழ்த்த கடமைப்பட்டு இருக்கிறோம்” என்று அவர் கூறினார்