கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனக நந்தல் கிராமத்தில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமதியின் தந்தை மணி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து சுமதி என் தம்பி வெங்கடேசன் விபத்தில் சிக்கி இறந்தார்.

தனது தந்தையும், தம்பியும் அடுத்தடுத்து இறந்ததால் மன உளைச்சலில் இருந்த சுமதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுமதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.