கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அம்மன் கொள்ளை மேடு கிராமத்தில் சுப்பராயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுனு(65) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அய்யனார் என்ற மகன் உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அய்யனார் தனது தாயிடம் சொத்து கேட்டு தகராறு செய்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த அய்யனார் தனது மகன் மணிகண்டனுடன் இணைந்து பவுனுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனை தட்டி கேட்ட பவுனுவின் மகள் பழனியம்மாள் பேத்தி கௌதமி ஆகியோரையும் அவர்கள் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயம் அடைந்த பவுனு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அய்யனாரை கைது செய்தனர்.