பக்கத்து வீட்டில் வசித்து வந்த 8 வயது சிறுமியை 16 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெல்ஹார் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனை பக்கத்து வீட்டில் வசிக்கும் 8 வயது சிறுமி அடிக்கடி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த சிறுவன், சிறுமியை தனியே அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். இதுகுறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.