காதில் இருக்கும் மெழுகுகள் காதுகளில் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. அதே நேரம் அந்த மெழுகினை அடிக்கடி எடுத்தால் காதில் எரிச்சலையும் வறட்சியையும் ஏற்படுத்தும். காதுகளில் அடிக்கடி இயர்பட்ஸ் பயன்படுத்தினால் காதில் காயம் அல்லது சீழ் வடிதல் பிரச்சனையை உண்டாக்கும். மேலும் பட்ஸ் பயன்படுத்துவதால் காதுகளில் நடுப்பகுதியில் செல்லும் நரம்பு பாதிப்புக்குள்ளானால் உணவின் சுவையை அறிய முடியாத நிலையில் ஏற்படலாம். எனவே இனி இயர் பட்ஸ் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.இயர் பட்ஸ் மட்டுமின்றி, குச்சி, ஹேர்பின் ஆகியவற்றையும் காதுக்குள் பயன்படுத்தக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.