இந்தியாவில் புத்தாண்டுக்கு பிறகு வட மாநிலங்களில் கடுமையான குளிர் மற்றும் அடர் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, சாலைப் போக்குவரத்து, விமான போக்குவரத்து போன்றவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

வட மேற்கு இந்தியா மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் அடர்ந்த மூடுபனி நிலவுவதால் சாலை மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அடர் பனி மூட்டம் காரணமாக உத்திர பிரதேசம், சண்டிகர், ஹரியானா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையால் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.