நாடு முழுவதும் சமீப காலமாகவே தாக்கலி விலை உச்சம் தொட்டு வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இதற்கிடையில் தக்காளியால் ஒருவித வினோதமான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் ஒடிசாவின் கட்டாக் பகுதியில் தக்காளி திருடுவதற்காக ஒருவர் தனது குழந்தைகளை கவனமாக திட்டமிட்டு அடமானம் வைத்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் இரண்டு குழந்தைகளையும் வேலைக்கு அழைத்து சென்று ரூ.300 தருவதாக நம்ப வைத்துள்ளார்.

சத்ரா பஜாரில் 2 கிலோ தக்காளி வாங்கி வந்த அவர், பணத்தை வீட்டில் மறந்துவிட்டதாக கூறி பணம் கொண்டு வரும் வரை குழந்தைகளை இங்கேயே வைத்திருக்குமாறு கூறி சென்றுள்ளார். இதனை நம்பிய கடைக்காரர் அதை வைத்து குழந்தைகளிடம் விசாரித்த போது உண்மையான விஷயம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.