மும்பை ஐஐடி வளாகம் ஒன்றில் சைவ மற்றும் அசைவம் சாப்பிடும் மாணவர்களுக்கு என்று தனித்தனி தட்டு கொடுப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் அசைவம் சாப்பிடுபவர்கள் உட்கார அனுமதி இல்லை என்றும் விளம்பரம் செய்யப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அதாவது மும்பை ஐஐடி கேண்டீன் வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில்  ‘சைவம் உண்பவர்களுக்கு மட்டுமே இங்கே உட்கார அனுமதி’ என குறிப்பிடப்பட்டுள்ளது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு சைவம், அசைவம் சாப்பிடுபவர்களுக்கு தனித்தனி தட்டுகள், அடுப்புகள் உள்ளதாகவும், விதிகளை பின்பற்றாவிட்டால் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படுவதாகவும் மாணவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.