உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மேலே அமர்ந்து கொண்டு  இரண்டு வாலிபர்கள் மது அருந்தியவாறு பயணம் செய்தனர்.  இது தொடர்பான காணொளி ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி பல்வேறு கருத்துக்களை எழ செய்துள்ளது.

இந்நிலையில் காணொளியில் காரின் மேல் அமர்ந்து பயணித்த  இரண்டு வாலிபர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்களது காரும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ட்விட்டர்  பதிவு ஒன்றை காவல்துறையினர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.