மேரா பில் மேரா அதிகார்’ என்ற திட்டத்தின் கீழ் தனிநபர்களுக்கு 1 கோடி ரூபாய் வரை ரொக்கப் பரிசை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ‘மேரா பில் மேரா அதிகார்’ திட்டத்தை அரசாங்கம் விரைவில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதால், மொபைல் செயலியில் ஜிஎஸ்டி விலைப்பட்டியலைப் பதிவேற்றும் நபர்களுக்கு வெகு விரைவில் வெகுமதி கிடைக்கும்.  இந்த திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளது. இதன் மூலம், மொபைல் செயலியில் ஜிஎஸ்டி விலைப்பட்டியலைப் பதிவேற்றும் நபர்களுக்கு வெகுமதி கிடைக்கும்.
ஒரு நபர் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 25 உண்மையான விலைப்பட்டியல்களை இந்த செயலியில் பதிவேற்ற முடியும். இந்நிலையில், 3 மாதங்களுக்கும் ஒருமுறை அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பரிசுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.