தமிழகத்தில் உள்ள இ சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த தகவல் தொழில்நுட்பத் துறை திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இ சேவை மையங்களை Digi Pay வரம்பிற்குள் கொண்டுவந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலமாக இ சேவை மையங்களில் ஆதார் பயோமெட்ரிக் மூலமாக வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

இ சேவை மையங்களில் அரசு சார்ந்த பல சான்றிதழ்கள் எடுத்தல் மற்றும் ஆதார் உள்ளிட்ட கார்டுகள் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் தற்போது உள்ள நிலையில் இதனைத் தொடர்ந்து பணம் எடுக்கும் வசதியும் மக்களுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.