
மும்பையிலுள்ள மலாடி என்ற பகுதியில் வசித்து வருபவர் மருத்துவர் ஓரினம் பிரண்டன் செர்ராவ் இவர் ஆன்லைன் மூலமாக பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார் . இதனை அடுத்து ஆர்டர் செய்து வந்த அந்த பேக்கை திறந்து பார்த்துள்ளார். அப்போது ஐஸ்கிரீமுக்குள் மனிதவிரல் கிடந்துள்ளது.
இதைக்கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து அந்த ஐஸ்கிரீமை எடுத்துக்கொண்டு அவர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார் .இதை அடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மனித விறல் கண்டெடுக்கப்பட்ட ஐஸ்கிரீம் கடைக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் அந்த விரலை தடையை அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர் . இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.