நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்தானது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் மன்சூர் அலிகான் மீது காவல்நிலையத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில் த்ரிஷாவிடம் மன்னிப்பு கோரி அறிக்கையை மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ளார். “அடக்க நினைத்தால் அடங்கமறு. இப்ப சொல்கிறேன். எனை மன்னித்துவிடு.

எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக. காவல் அதிகாரி அம்மையார் த்ரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, ‘ஐயஹோ எனக்கும் வருத்தம் தான் வந்தது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.