சமீபத்தில் ஒரு நோயாளியின் ஆசனவாயில்  (anus) சிக்கிய கேரட்டை மருத்துவர்கள் அவசர அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் மருத்துவ வட்டாரங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி, உடலுக்குள்  பொருட்களை நுழைப்பதன் ஆபத்துகள் குறித்து மருத்துவர்களை எச்சரிக்க வைத்துள்ளது.

மருத்துவர் பீட்டர் எட்வர்ட், தனது X கணக்கில் இதைப் பற்றிய பதிவு ஒன்றை வெளியிட்டு, “அறுவைச் சிகிச்சை முடிந்தது, கேரட்டை மீட்டோம்! இப்படிப்பட்ட  பொருட்களை உடலில் வைக்காதீர்கள்!” என கண்டித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தான உடலியல் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும்  உடலின் இயற்கையான செயல்பாடுகளுக்கு எதிராக செயல்படுவது, சீரியஸான மருத்துவ அவசர நிலைகளை உருவாக்கும் என்பதால், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.