பீகார் மாநிலம் சப்ராவில் உள்ள சர்தார் மருத்துவமனையில் கிட்சி சிகிச்சைக்காக முதியவர் ஒருவர் சென்றுள்ளார். அவருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்த போது அவரது வயிற்றில் கருப்பை இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் சோனோகிராபர் கருப்பை இருப்பதாக குறிப்பிட்டு ரிப்போர்ட் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களின் குடும்பத்தினர் மீண்டும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தபோது உண்மை தெரிய வந்துள்ளது. அதாவது இவர் பல வருடங்களாக கிட்சி கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அடிக்கடி கிட்சிக்கான  அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து அதன் ரிப்போர்ட்டை மருத்துவர்களிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது வழக்கம்.

அதன்படி சப்ராவில் உள்ள சர்தார் மருத்துவமனையில் நேற்று அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்துள்ளார். அதன் முடிவுகளில் அவரது வயிற்றில் கருப்பை இருந்ததாக சோனோகிராப் ரிப்போர்ட் கொடுத்திருக்கின்றார். இந்த ரிப்போர்ட்டை அவர் மருத்துவரிடம் காண்பித்துள்ளார். அப்போது அவர் கருப்பை விவரத்தை முதியவரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மீண்டும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்த்தபோது அப்படி எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. முதற்கட்ட தகவலில் கர்ப்பிணிகளுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பழக்கப்பட்ட சோனோகிராபர் தவறுதலாக  கருப்பை இருந்ததாக குறிப்பிட்டு முதியவருக்கு ரிப்போர்ட் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.