உத்தரபிரதேசத்தில் அரசின் திருமண உதவித்தொகையைப் பெறுவதற்காக மணமகனே இல்லாமல் தனக்குத்தானே பெண்கள் திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சரின் திருமண உதவித்திட்டத்தின்கீழ் 500க்கும் மேற்பட்டோருக்கு திருமணம் செய்துவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மணமகனே இல்லாமல் சில பெண்கள் தனக்குத்தானே மாலை மாற்றிக்கொண்டுள்ளனர். அரசு சார்பில் 500க்கும் மேற்பட்ட ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு நடந்தது.

இதில் ரூ.51,000 ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்களை பெறுவதற்காக தம்பதிகள், சகோதர-சகோதரிகள் கூட பங்கேற்றது தொடர்பாக அரசு அதிகாரிகள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.