ராம் டைரக்டு செய்த “கற்றது தமிழ்” படம் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் அஞ்சலி. அங்காடித்தெரு திரைப்படம் அஞ்சலிக்கு திருப்பு முனையாக அமைந்தது. இதையடுத்து அவர் நடித்த எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா ஆகிய படங்களிலும் அஞ்சலியின் நடிப்பு பேசப்பட்டது. திரையுலகில் அறிமுகமாகி இதுவரையிலும் 49 படங்களில் நடித்து முடித்துள்ள அஞ்சலி இப்போது 50-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த படத்துக்கு “ஈகை” என பெயரிடப்பட்டிருக்கிறது. கிரீன் அமியூஸ்மெண்ட் மற்றும் டி3 புரடொக்சன்ஸ் இணைந்து தயாரிக்கக்கூடிய இந்த படத்தை அசோக் வேலாயுதம் இயக்குகிறார். இப்படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, தரண் குமார் இசையமைக்கிறார். இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.