தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், இப்போது மாமன்னன், ரிவால்வர் ரீட்டா, ரகு தத்தா, சைரன் போன்ற படங்களில் நடித்து உள்ளார். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரின் சகோதரி ரேவதி சுரேஷ் ஆகியோர் நேற்று (மே 27) திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

இதையடுத்து கோயிலுக்கு வெளியில் கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களுடன் பேசியபோது “நீண்ட நாட்களுக்கு பிறகு ஏழுமலையானை வழிபட்டது என் மனதுக்கு இதமாக இருக்கிறது. அதோடு என் சகோதரி ரேவதி சுரேஷ் இயக்கும் குறும்படத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என கூறினார்.