வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றாகிய அசாமில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. அசாமில் உள்ள நகான் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி இருக்கிறது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையமாக கொண்டு இந்த நிலஅதிர்வு ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையமானது தெரிவித்து உள்ளது. இன்று மாலை 4:20 மணியளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எத்தகவலும் இல்லை.