அசாமில் இறந்த பிறந்த குழந்தை மயானத்தில் கண் விழித்த அதிசயம் நடந்துள்ளது. அசாம் மாநிலம் கச்சார் மாவட்டம் சில்சார் நகரை சேர்ந்த பெண்ணுக்கு பிரசவத்தின் போது குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தை இறந்து பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மறுநாள் குழந்தைக்கு மயானத்தில் இறுதி சடங்கு செய்த போது குழந்தை திடீரென அழத் தொடங்கியது.

உடனே இதை கண்டு வியந்து போன உறவினர்கள் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மயானத்தில் இறுதி சடங்கின்போது இறந்த குழந்தை உயிருடன் மீண்டும் வந்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.