
மத்தியப் பிரதேச மாநிலம் ரைசன் மாவட்டத்தின் பேகம்கஞ்ச் பகுதியில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது பூரேரு கிராமத்தைச் சேர்ந்த ரகுராஜ் ராஜ்புத், தனது மனைவி சோனாலியுடன் அவரது மைத்துனர் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு சோனாலி தனது கணவருக்கு தேநீர், பிஸ்கட் மற்றும் தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷம்கொண்ட உணவுகளால் பாதிக்கப்பட்ட ரகுராஜ் மயக்கமடைந்ததால், அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தக்க நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் உயிர் பிழைத்தார்.
இந்த சம்பவம் கணவன்-மனைவிக்குள் உள்ள நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரகுராஜ் ராஜ்புத் தனது மனைவி சோனாலியுடன், ஒவ்வொரு மாதமும் தனது சகோதரியின் வீட்டிற்கு செல்ல பிடிவாதம் பிடிப்பதாகவும், சகோதரியின் மைத்துனருடன் சோனாலிக்கு நெருக்கம் இருந்ததாகவும் கூறியுள்ளார். இதுவே விஷம் கொடுக்கும் முயற்சிக்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகின்றது.
ரகுராஜும் சோனாலியும் 2020 ஜூன் 27 அன்று ஜபல்பூரில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், மனைவியின் செயலால் அவருடைய உடல்நிலை மட்டுமல்லாது குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அதே பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.