இந்தியாவில் தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.  இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் தங்களுடைய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகிறது. அதன்படி முதல் கட்டமாக மத்திய அரசு 4% அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு, ஒடிசா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களும் ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது.

அந்தவகையில் தற்போது ஜார்கண்ட் மாநில அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்த அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது ஜூலை 1ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.