விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது காமெடியில் மக்கள் மனதில் இடம் பிடித்து திரைப்படத்தை தொடங்கியவர் தான் ரோபோ சங்கர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் இவரை வெற்றி பெற வைத்தது இவரின் பேச்சு தான். தன்னுடைய கம்பீரமான உடம்பினால் பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்தவர். இந்நிலையில் இவர் சமீபத்தில் உடல் எடை மெலிந்து மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டார்.

இதனால் இவருக்கு மஞ்சள் காமாலை பாதித்து இருப்பதாகவும் அது அவருக்கு ஆறு மாதங்களாக தெரியாமல் இருந்துள்ளது என்றும் பல செய்திகள் இணையத்தில் உலா வந்தன. மேலும் ரோபோ சங்கர் அதிகமான அசைவ உணவுகளையும் மற்றும் மது அருந்தும் பழக்கம் கொண்டுள்ளது இதற்கு காரணம் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் பல புகைப்படங்களை வெளியிட்டு வரும் ப்ரோ ஷங்கரின் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. அவரின் மனைவி குடும்பத்துடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், இன்னைக்கும் என்னைக்கும் நல்லா இருப்பார், ஃபேக் நியூஸ் போடும் நாய்களுக்கு என்று குறிப்பிட்ட இந்த பதிவை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Ranjith இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@newsreader_ranjith)