
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை சத்குரு தியாகராஜரின் 176வது ஆராதனை விழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வான பஞ்சரத்தின கீர்த்தனை வரும் 11ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது. இதனையடுத்து அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக வருகின்ற 21ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.